செய்திகள்

இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி: 3-வது சுற்றில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி!

எழில்

அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

2-வது சுற்றில், உலகின் 18-ஆம் நிலை வீரர் நிக்கோலஸ் பஸிலாஷ்வில்லியை வீழ்த்தி 29 வயது பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது வாழ்க்கையில் பெரிய வெற்றியை பெற்றார். இதனால் மூன்றாவது சுற்று ஆட்டம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. எனினும், குரோஸியாவைச் சேர்ந்த 40 வயது இவோ கர்லோவிக் 6-3, 7-6(3) என்ற நேர் செட்களில் பிரஜ்னேஷை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்றது. 

எனினும் இரு அசத்தலான வெற்றிகளால் பிரஜ்னேஷுக்கு இந்தப் போட்டி மறக்கமுடியாததாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT