செய்திகள்

புரோ கபடி லீக் 7-ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம்

DIN


புரோ கபடி லீக் போட்டி 7-ஆவது சீசன் வீரர்கள் ஏலம் வரும் ஏப். 8, 9 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் பல்வேறு அணிகள் 29 முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளன.
கபடியை மேம்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட புரோ கபடி லீக் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, 6 சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 7-ஆவது சீசன் போட்டிகள் வரும் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கவுள்ளன.
தமிழ்த் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர் அஜய் தாகுர், மஞ்சித் சில்லார், பாட்னா பைரேஸ்ட் அணியில் பர்தீப் நர்வால், நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணியில் ரோஹித் குமார், பவன்குமார் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
யு மும்பாவில் பúஸல் அத்ரச்சலி, தெலுகு டைட்டன்ஸ் அணியில் பர்ஹத் ரஹிமி, மொúஸன், தபாங் தில்லியில் மெராஜ் ஷேய்க் உள்ளிட்ட ஈரான் வீரர்களும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 29 வீரர்களை அணிகள் தக்க வைத்துள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT