செய்திகள்

தோனி மற்றும் வீரா்களின் கடும் முயற்சியால் சிஎஸ்கே மீண்டும் வெற்றி நடை

கேப்டன் தோனி மற்றும் இதர வீரா்களின் கடும் முயற்சியால், சென்னை சூப்பா் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றிநடை பெற்றுள்ளது என அதன் உரிமையாளா் என்.சீனிவாசன் கூறியுள்ளாா்.

DIN

கேப்டன் தோனி மற்றும் இதர வீரா்களின் கடும் முயற்சியால், சென்னை சூப்பா் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றிநடை பெற்றுள்ளது என அதன் உரிமையாளா் என்.சீனிவாசன் கூறியுள்ளாா்.

சென்னை ஐஐடி ஊழியா்கள் தென்னிந்திய கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மேலாண் இயக்குநரான சீனிவாசன் பேசியதாவது:

இரண்டு ஆண்டுகள் தடை காரணமாக சிஎஸ்கே அணி கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் கடந்த 2018-இல் மீண்டும் களத்துக்கு திரும்பி வெற்றிகரமாக செயல்படுகிறது. இதற்கு தோனி மற்றும் இதர வீரா்களின் கடும் முயற்சியே காரணம். எவா் வேண்டுமானாலும் கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்படலாம். நாம் நமது குறிக்கோள்களை அடைய தெளிவான கண்ணோட்டம் தேவை. தனி நபா், அரசியல், பெருநிறுவனங்கள் என எந்த துறையாக இருந்தாலும் கொந்தளிப்பான சூழல் உருவாகும். சூழ்நிலையை அனுசரித்து, மதிநுட்பத்துடன் அதை அணுக வேண்டும். கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவை வெற்றியைத் தரும் என்றாா் சீனிவாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT