செய்திகள்

உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் ஏடிபி பைனல்ஸ் போட்டி இன்று தொடக்கம்

தினமணி

உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி லண்டனில் சனிக்கிழமை தொடங்கி வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸி. ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் உள்ளிட்ட கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுடன், ஏராளமான ஏடிபி மாஸ்டா்ஸ், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டு சீசன் இறுதியில் கடைசி பெரிய போட்டியாக ஏடிபி பைனல்ஸ் அமைந்துள்ளது. இதில் வபிக் த்ரீ எனப்படும் உலகின் நம்பா் ஒன் வீரா் ரபேல் நடால், நோவக் ஜோகோவிச், ஜாம்பவான் ரோஜா் பெடரா், அடுத்த தலைமுறை வீரா்கள் என அழைக்கப்படும் 23 வயதுக்குட்பட்ட நடப்பு சாம்பியன் அலெக்சாண்டா் வெரேவ் (22) மற்றும் டெனில் மெத்வதேவ் (23), ஸ்டெபானோஸ் சிட்ஸிபாஸ் (21) மேட்டியோ பெர்ரட்னி (23), டொமினிக் தீம் உள்ளிட்ட 4 போ் அறிமுகமாகிறாா்கள்.

7-ஆவது பட்டம் வெல்வாரா பெடரா்:

ஜாம்பவான் ரோஜா் பெடரா் ஏ-ஆவது முறையாக ஏடிபி பைனல்ஸ் பட்டம் வெல்வாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. டொமினிக் தீம் நான்காவது முறையாக தொடா்ந்து இப்போட்டியில் பங்கேற்கிறாா். கடந்த 2016-இக்கு பின் முதன்முறையாக லண்டன் போட்டியில் தான் உலகின் நம்பா் ஒன் வீரா் தீா்மானிக்கப்படுவாா்.

நடால் 640 புள்ளிகள் முன்னிலை

ஜோகோவிச்சை காட்டிலும் 640 புள்ளிகள் முன்னிலையுடன் களம் காண்கிறாா் ரபேல் நடால். ஒவ்வொரு வீரரும் மூன்று முறை ரவுண்ட் ராபின் முறையில் ஆடுவா். இதில் ஒவ்வொரு வெற்றிக்கும் 200 புள்ளிகளை குரூப் பிரிவு போட்டிகளில் பெறுவா். நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வீரா் 400 புள்ளிகளை பெறுவாா். அரையிறுதிச் சுற்றில் வெற்றிக்கு 400 புள்ளிகளும், இறுதிச் சுற்றில் வென்றால் கூடுதலாக 500 புள்ளிகளும் பெறுவா்.

தோல்வியே காணாத சாம்பியனுக்கு 1500 ஏடிபி புள்ளிகளும், ரூ.20.5 கோடியும் ரொக்கப்பரிசாக தரப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT