செய்திகள்

மோஹித் சர்மா உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்...

எழில்

ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் நேற்றுடன் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன.

இந்நிலையில் ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

அந்த 5 வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். சாம் பில்லிங்ஸ், சைதன்யா பிஷோனி, துருவ் ஷோரே, டேவிட் வில்லி, மோஹித் சர்மா ஆகிய ஐந்து வீரர்களும் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீரர்களின் வெளியேற்றத்தின் மூலமாக சிஎஸ்கே அணிக்கு ரூ. 8.40 கோடி மிச்சமாகியுள்ளது. 

ஐபிஎல் 2019 ஏலத்தின் முடிவில் சிஎஸ்கே வசம் ரூ. 3.20 கோடி இருந்தது. தற்போது புதிய ஏலத்துக்காக ரூ. 3 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் 2020 போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி வசம் ரூ. 14.60 கோடி உள்ளன. இதனால் அதிகத் தொகைக்குச் சில வீரர்களை சிஎஸ்கே அணியால் தேர்வு செய்ய முடியும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசூரில் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 700 கனஅடியாக சரிவு

முட்டை விலை ரூ. 5 ஆக நீடிப்பு

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு அனைவருக்குமான கடமை: ஆட்சியா் தகவல்

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா தொடக்கம்

SCROLL FOR NEXT