செய்திகள்

முருகப்பா ஹாக்கி: இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி மோதல்

DIN

93-ஆவது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்ககக் கோப்பை ஹாக்கி போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் முன்னேறியுள்ளன.
 போட்டியின் 9-ஆவது நாளான சனிக்கிழமை சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் ஆட்டத்தில் ஐஓசி 6-3 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 மத்திய செயலகம் தரப்பில் தரம்பீர் யாதவ், கோவிந்த் சிங், சாஹிர் முகமது கோலடித்தனர்.
 இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கடற்படையை 2-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பஞ்சாப் நேஷனல் வங்கி.
 கடற்படை தரப்பில் ஜுக்ராஜ் சிங்கும், பஞ்சாப் வங்கி தரப்பில் மந்தீப் மோர், குர்ஜிந்தர் சிங், அபிஷேக், சுக்ஜித் சிங் ஆகியோர் கோலடித்தனர்.
 ஐஓசி-பஞ்சாப் நேஷனல் வங்கி இடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT