செய்திகள்

அபார பேட்டிங் & பந்துவீச்சு: வலுவான நிலையில் இந்திய ஏ அணி!

இந்திய ஏ அணித் தரப்பில் நதீம், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 

எழில்

இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் எடுத்துள்ளது.

மைசூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் இந்திய ஏ அணி, 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 78, சஹா 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய ஏ அணி, 417 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஷுப்மன் கில் 92, கருண் நாயர் 78, சஹா 60, ஷிவம் டுபே 68, ஜலஜ் சக்ஸேனா 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் முல்டர், பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 2-ம் நாளின் முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. கேப்டன் மார்க்ரம் 83, முல்டர் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்கள். அந்த அணிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 258 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய ஏ அணித் தரப்பில் நதீம், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

SCROLL FOR NEXT