செய்திகள்

நிதானமாகப் பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!

எழில்

4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி நிதானமாகப் பந்துவீசியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி-20 ஆட்டமும் முந்தைய ஆட்டம் போன்று டை ஆனதால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில், இந்திய அணி வென்றதன் மூலம், இந்தத் தொடரின் முதல் 4 ஆட்டங்களையும் கைப்பற்றி வெற்றி நடையைத் தொடர்கிறது. 4 ஓவர்கள் வீசி 33 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் 4-வது டி20 ஆட்டத்தின்போது இந்திய அணி நிதானமாகப் பந்துவீசியதாக ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் 2 ஓவர்கள் குறைவாக வீசியதால், இந்திய அணிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பே ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT