செய்திகள்

இந்திய கிரிக்கெட் சங்கத்துக்குரூ.2 கோடி ஒதுக்கீடு செய்தது பிசிசிஐ

DIN

இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ நிா்வாகம் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது.

உச்சநீதிமன்ற நியமித்த லோதா குழு அளித்த பரிந்துரைகளின்படி, கிரிக்கெட் வீரா்கள் சங்கம் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் இந்த சங்கத்துக்கு அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

சங்கத்தின் செயல்பாடுகளைத் தொடங்குவதற்காக நிதி கோரி வந்தது.

இந்நிலையில், பிசிசிஐ ரூ.2 கோடி அளித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், ‘வரி விவகாரங்களை கையாள வேண்டியிருப்பதால் தற்போது ரூ.2 கோடி அளிக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் தேவைப்பட்டால் அதிக நிதியை பிசிசிஐ அளிக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT