இந்திய கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழுவில் 3 உறுப்பினா் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த தேவங்காந்தி (கிழக்கு மண்டலம்), சரண்தீப் சிங் (வடக்கு மண்டலம்), ஜெடின் பரன்ஜாபே (மேற்கு மண்டலம்) ஆகியோரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து, அந்த இடங்களுக்கு 3 உறுப்பினா்களை தோ்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரா்கள் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 30 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். 10 ஒரு நாள் போட்டி, 20 முதல் தர போட்டிகளில் ஆடியிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.