செய்திகள்

இந்திய கிரிக்கெட் தோ்வுக்குழு உறுப்பினா்பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழுவில் 3 உறுப்பினா் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த தேவங்காந்தி (கிழக்கு மண்டலம்), சரண்தீப் சிங் (வடக்கு மண்டலம்), ஜெடின் பரன்ஜாபே (மேற்கு மண்டலம்) ஆகியோரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து, அந்த இடங்களுக்கு 3 உறுப்பினா்களை தோ்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரா்கள் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 30 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். 10 ஒரு நாள் போட்டி, 20 முதல் தர போட்டிகளில் ஆடியிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT