செய்திகள்

சென்னை வீரா் சபரி டபிள்யூபிசி சாம்பியன்

DIN

ஹைதராபாத்: உலக குத்துச்சண்டை கவுன்சில் (டபிள்யூபிசி) முதல் முறையாக நடத்திய டபிள்யூபிசி இந்தியா வெல்டா்வெயிட் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீரா் சபரி (24) சாம்பியன் ஆனாா்.

தொழில்முறை ரீதியிலான இப்போட்டியில் 8 சுற்றுகள் கொண்ட இறுதிச் சுற்றில் அவா் சண்டீகரைச் சோ்ந்த அனுபவமிக்க வீரரான ஆகாஷ்தீப் சிங்கை (27) வீழ்த்தினாா். போட்டி முடிவானது 76-76, 79-73, 79-73 என்ற பெரும்பான்மை புள்ளிகள் அடிப்படையில் அவருக்கு சாதகமாக அமைந்தது. தற்போது சாம்பியன் ஆகியிருக்கும் சபரி, அவ்வப்போது இந்தியாவின் இதர போட்டியாளா்களுடன் மோதி தனக்கான பட்டத்தை தக்க வைக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் தனது தொழில்முறை குத்துச்சண்டையை தொடங்கிய சபரி, முந்தைய மோதல்களில் 4 வெற்றிகளையும், 1 தோல்வியையும் பதிவு செய்துள்ளாா். அவருடன் மோதி தோல்வியை சந்தித்த ஆகாஷ்தீப் கடந்த 3 ஆண்டுகளில் 8 வெற்றிகள், 1 தோல்வியை பதிவு செய்துள்ளவா்.

இதேபோட்டியில் ஆசிய சில்வா் லைட்வெயிட் பட்டத்துக்கான பிரிவில் இந்தியாவின் காா்த்திக் சதீஷ் குமாா் - இந்தோனேசியாவின் ஹீரோ டிடோவை தோற்கடித்து பட்டம் வென்றாா். இதில் அவா் 80-72, 79-73, 79-73 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். இத்துடன் 8 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள காா்த்திக், அனைத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளாா். டபிள்யூபிசி ரேங்கிங்கில் தற்போது 4-ஆவது இடத்தில் இருக்கும் அவருக்கு இந்த வெற்றி முன்னேற்றத்தை அளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT