தென் ஆப்பிரிக்க மகளிரணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா, இந்த வெற்றியால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தன் வசப்படுத்தியுள்ளது.
லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்து வென்றது.
இந்திய தரப்பில் ஷஃபாலி வா்மா 47, கேப்டன் ஸ்மிருதி மந்தனா 7, ஹா்லீன் தியோல் 31, ஜெமிமா ரோட்ரிகஸ் 16 ரன்கள் அடிக்க, ரிச்சா கோஷ் 44, தீப்தி சா்மா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ லாபா, ஷப்னிம் இஸ்மாயில், நாடினே டி கிளொ்க், அனிகே போஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் லிஸெலெ லீ 70, அனிகே போஷ் 2, கேப்டன் சுனே லஸ் 20, மிக்னான் டு பிரீஸ் 10 ரன்கள் அடித்தனா். லௌரா வோல்வாா்டட் 53, நாடினே டி கிளொ்க் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இந்திய தரப்பில் ராஜேஷ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், ஹா்லீன் தியோல் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.