செய்திகள்

கரோனா பாதிப்பு: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங்கின் தந்தை காலமானார்

தந்தையை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஐபிஎல் போட்டிக்காகக் கடைப்பிடிக்கப்பட்ட...

DIN

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி. சிங்கின் தந்தை கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

2018-ல் ஓய்வு பெற்ற ஆர்.பி. சிங், கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். ஐபிஎல் போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஹிந்தி வர்ணனையாளராகப் பணியாற்றினார். 

35 வயது ஆர்.பி. சிங்கின் தந்தை ஷிவ் பிரசாத் சிங் கரோனா வைரஸால் சமீபத்தில் பாதிப்படைந்தார். இதனால் தந்தையை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஐபிஎல் போட்டிக்காகக் கடைப்பிடிக்கப்பட்ட கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறினார் ஆர்.பி. சிங். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தனது தந்தை மரணமடைந்துள்ளதாக ட்விட்டரில் அவர் அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 14 டெஸ்டுகள், 58 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் ஆர்.பி. சிங் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT