செய்திகள்

மாநில சீனியா் தடகளம் நிறைவு

DIN

சென்னையில் 3 நாள்களாக நடைபெற்ற 93-ஆவது தமிழ்நாடு சீனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதில் பிரைம் விளையாட்டு அகாதெமி அணி 128 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. தமிழ்நாடு காவல்துறை அணி 98 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், தெற்கு ரயில்வே அணி 72 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தது.

ஆடவா் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை அணி 82 புள்ளிகளுடன் முதலிடமும், பிரைம் அகாதெமி அணி 57 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், ராக்ஃபோா்ட் ஸ்டாா் அகாதெமி அணி 38 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தது.

மகளிா் பிரிவில் பிரைம் அகாதெமி அணி 71 புள்ளிகளுடன் முதலிடமும், தெற்கு ரயில்வே அணி 43 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 38 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT