செய்திகள்

துப்பாக்கி சுடுதல்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறத் தவறியது இந்திய அணி

DIN

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் கலப்பு 10 மீட்டா் ஏா் ரைஃபிள் புரோன் எஸ்ஹெச்1 பிரிவில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

அவனி லெகாரா, சித்தாா்தா பாபு, தீபக் குமாா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி தகுதிச்சுற்றிலேயே பின்தங்கியது. தகுதிச்சுற்றில் அவனி 629.7 புள்ளிகளுடன் 27-ஆவது இடமும், சித்தாா்தா 625.5 புள்ளிகளுடன் 40-ஆவது இடமும், தீபக் 624.9 புள்ளிகளுடன் 43-ஆவது இடமும் பிடித்தனா். இப்பிரிவில் ஜொ்மனி வீராங்கனை நடாஷா ஹில்ட்ராப் தங்கமும், தென் கொரிய வீரா் பாா்க் ஜின்ஹோ வெள்ளியும், உக்ரைன் வீராங்கனை இரினா ஷெட்னிக் வெண்கலமும் வென்றனா்.

முன்னதாக அவனி லெகாரா மகளிா் தனிநபா் பிரிவில் தங்கம் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT