ஐ.பி.எல். கோப்பை - 2021 
செய்திகள்

பச்சைக் கொடி காட்டிய பிசிசிஐ: ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

ரசிகர்களின்றி இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். 14வது சீசன் கரோனா காரணமாக கடந்த மே மாதம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியின் நடப்புத் தொடரின் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, அனைத்து அணி வீரர்களும் துபையில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே இன்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் முதல் போட்டிக்கான டிக்கெட் நாளை(செப்.16) முதல் இணையதளத்தில் விற்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT