முகப்பு
செய்திகள்

இந்தியா ஏ - தெ.ஆ. ஏ அணிகள் பங்கேற்ற 2-வது டெஸ்ட்: முடிவு என்ன?

ஈஸ்வரன் 55 ரன்களும் விஹாரி 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

Updated On : 4 டிசம்பர் 2021, 11:02 am IST
விஹாரி (கோப்புப் படம்)
பகிர்:

இந்தியா ஏ - தெ.ஆ. ஏ அணிகள் பங்கேற்ற 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி 297 ரன்கள் எடுத்தது. மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய ஏ அணியில் நவ்தீப் சைனி, இஷான் போரல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் எடுத்தார்.

Advertisement

Advertisement

இந்திய ஏ அணி 74.5 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் கான் 71 ரன்கள் எடுத்தார். கிளெண்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு தெ.ஆ. ஏ அணி 58.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. எந்த ஒரு பேட்டரும் அரை சதம் எடுக்கவில்லை. இஷான் போரல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய ஏ அணி வெற்றி பெற 234 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய ஏ அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 55 ரன்களும் விஹாரி 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 

3-வது டெஸ்ட், டிசம்பர் 6 அன்று தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments