இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 
செய்திகள்

காமன்வெல்த் போட்டிகள்: அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

DIN

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

பிர்மிங்கமில் நடைபெற்ற இந்தியா - பார்படோஸ் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஷஃபாலி வர்மா 43 ரன்களும் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும் எடுத்தார்கள். பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடமும் இந்தியா 2-ம் இடமும் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT