இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 
செய்திகள்

காமன்வெல்த் போட்டிகள்: அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

DIN

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

பிர்மிங்கமில் நடைபெற்ற இந்தியா - பார்படோஸ் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஷஃபாலி வர்மா 43 ரன்களும் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும் எடுத்தார்கள். பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடமும் இந்தியா 2-ம் இடமும் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT