செய்திகள்

இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த பெரிய செஸ் போட்டி

பொதுப்பிரிவு, மகளிர் என இரண்டுக்கும் சம அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதற்கடுத்ததாக இன்னொரு பெரிய செஸ் போட்டியை நடத்தவுள்ளது இந்தியா.

கொல்கத்தாவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டி நடைபெறவுள்ளது (டிசம்பர் 2 ஓய்வு நாள்). இந்தமுறை முதல்முறையாக பெண்களுக்கென தனியே போட்டி நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவு, மகளிர் என இரண்டுக்கும் சம அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரேபிட், பிளிட்ஸ் என இரு விதமாக இப்போட்டி நடைபெறவுள்ளது. மகளிர் பிரிவில் முன்னணி 5 சர்வதேசப் பெண் கிராண்ட்மாஸ்டர்களும் 5 முன்னணி இந்திய வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில் ரேபிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜுனும் பிளிட்ஸ் பிரிவில் லெவோன் அரோனியனும் வென்றார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு வரவேற்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 240 மனுக்கள்

காா்-சுமை வாகனம் மோதியதில் 3 போ் காயம்

கிரகணம் முடிந்தது... தமன்னா!

சிக்கல் தீா்த்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT