செய்திகள்

இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த பெரிய செஸ் போட்டி

பொதுப்பிரிவு, மகளிர் என இரண்டுக்கும் சம அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதற்கடுத்ததாக இன்னொரு பெரிய செஸ் போட்டியை நடத்தவுள்ளது இந்தியா.

கொல்கத்தாவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டி நடைபெறவுள்ளது (டிசம்பர் 2 ஓய்வு நாள்). இந்தமுறை முதல்முறையாக பெண்களுக்கென தனியே போட்டி நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவு, மகளிர் என இரண்டுக்கும் சம அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரேபிட், பிளிட்ஸ் என இரு விதமாக இப்போட்டி நடைபெறவுள்ளது. மகளிர் பிரிவில் முன்னணி 5 சர்வதேசப் பெண் கிராண்ட்மாஸ்டர்களும் 5 முன்னணி இந்திய வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில் ரேபிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜுனும் பிளிட்ஸ் பிரிவில் லெவோன் அரோனியனும் வென்றார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT