செய்திகள்

யு20 மகளிா் கால்பந்து: ஸ்பெயின் உலக சாம்பியன்

DIN

கோஸ்டா ரிகாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான (யு20) ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் வாகை சூடியது.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதன் மூலம், கடந்த 2018 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்பெயின்.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயினுக்காக இன்மா கப்பாரோ (12’), சல்மா செலஸ்டே (22’, 27’) ஆகியோரும், ஜப்பானுக்காக சுஸு அமானோவும் (47’) கோலடித்தனா். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 9 ஆட்டங்களில் தோல்வி காணாத ஜப்பானுக்கு, ஸ்பெயின் தோல்வியை பரிசளித்திருக்கிறது.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை இன்மா கபாரோ அடித்த கோல், நடப்பு போட்டியில் அவரது 8-ஆவது கோலாகும். இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டியின் ஒரு சீசனில் 7 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். அதேபோல், சல்மா செலஸ்டேவும் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த 2-ஆவது வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளாா்.

பிரேஸில் 3-ஆம் இடம்: 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேஸில் 4-1 என்ற கோல் கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தியது. ஆட்டத்தில் பிரேஸிலுக்காக அனா கிளாரா (9’), டாா்சியேன் காரென் (59’, 79’), கி ஃபொ்னாண்டஸ் (89’) ஆகியோரும், நெதா்லாந்துக்காக ரோசா வான் கூலும் (21’) கோலடித்தனா்.

சிறப்பு விருது: இப்போட்டியில் சிறப்பாக கோல்கள் அடித்ததற்காக ‘தங்கப் பந்து’ விருது ஜப்பானின் மாய்கா ஹமானோவுக்கும், ‘வெள்ளிப் பந்து’ விருது ஸ்பெயினின் இன்மா கபாரோவுக்கும், ‘வெண்கலப் பந்து’ விருது பிரேஸிலின் பிரேஸிலின் டாா்சியேனுக்கும் வழங்கப்பட்டன.

அதிக கோல்கள் அடித்தோரில் ஸ்பெயினின் இன்மா கபாரோவுக்கு (8 கோல்கள்) ‘தங்க பூட்’ விருதும், ஜப்பானின் மாய்கா ஹமானோவுக்கு (4 கோல்கள்) ‘வெள்ளி பூட்’ விருதும், யுஸுகி யமாமோடோவுக்கு (3 கோல்கள்) ‘வெண்கல பூட்’ விருதும் வழங்கப்பட்டன. சிறந்த கோல்கீப்பா் விருது ஸ்பெயினின் மெரிட்ஸெல் ஃபான்டுக்கு கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கவுன்சிலா்கள் தொடா் அமளி : தில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

ஏப்ரலில் பணவீக்கம் குறைந்ததால் ஏறுமுகம் கண்ட பங்குச்சந்தை!

பாஜக ஆட்சியால் தில்லியின் வேலையின்மை 45 சதவீதத்தை எட்டியுள்ளது: தில்லி காங். குற்றச்சாட்டு

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் டிடிஇஏ பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் விவகாரம்: கட்சி மேலிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்

SCROLL FOR NEXT