கோப்புப்படம் 
செய்திகள்

ஆஸ்திரேலிய தொடர்: இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா

ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடருக்கு முன்பு இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடருக்கு முன்பு இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இலங்கை இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடவுள்ள இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அதேநாளில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ஏடி பரிசோதனை முடிவிலும் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 20 வரை நடைபெறவுள்ள 5 ஆட்டங்களும் சிட்னி கிரிக்கெட் மைதானம், மனுகா ஓவல் மற்றும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT