செய்திகள்

இந்திய அணியில் ரவி பிஷ்னாய்: குல்தீப்புக்கும் வாய்ப்பு எனத் தகவல்

மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN


மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

"மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். புதிய முகமாக ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துகிறார்."

புவனேஷ்வர் குமார் ஒருநாள் தொடரில் தக்கவைக்கப்பட்டு, டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், விராட் கோலி இரண்டு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT