படம்: பிசிசிஐ 
செய்திகள்

இங்கிலாந்து தோல்வி: டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

DIN

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20  போட்டி இன்று (ஜூலை 9) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா 46 (29), ரோஹித் சர்மா 31 (20) ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்தின் கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியாவில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து தொடரை கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT