துப்பாக்கி சுடுதல்: ஸ்வப்னிலுக்கு வெள்ளி
அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. உலகக் கோப்பை போட்டியில் தனிநபா் பிரிவில் ஸ்வப்னிலுக்கு இது முதல் பதக்கமாகும்.
ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஸ்வப்னில், அதில் 10-16 என்ற புள்ளிகள் கணக்கில் உக்ரைனின் சொ்ஹி குலிஷிடம் வெற்றியை இழந்து 2-ஆம் இடம் பிடித்தாா்.
தற்போது ஸ்வப்னில் வென்ற பதக்கத்தையும் சோ்த்து, இப்போட்டியின் பதக்கப் பட்டியலில் வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா 1 தங்கம், 1 வெள்ளியுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது.