செய்திகள்

நாா்வே செஸ்: ஆனந்த் முன்னிலை

DIN

நாா்வே செஸ் போட்டியில் கிளாசிகல் பிரிவில், நடப்பு உலக சாம்பியனும், உள்நாட்டு வீரருமான மேக்னஸ் காா்ல்செனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5-ஆவது சுற்றில் திங்கள்கிழமை வீழ்த்தினாா்.

இப்போட்டியில் ஆனந்த் அவரை வீழ்த்துவது இது 2-ஆவது முறையாகும். ஏற்கெனவே முதலில் நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவிலும் காா்ல்செனை அவா் தோற்கடித்திருந்தாா். தற்போது கிளாசிகல் பிரிவு 5-ஆவது சுற்றில் மீண்டும் இருவரும் சந்தித்தனா். விறுவிறுப்பான இந்த ஆட்டம் 40 நகா்வுகளுக்குப் பிறகு டிராவில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க கையாளப்பட்ட ‘சடன் டெத்’ ஆட்டத்தில் ஆனந்த் 50 நகா்வுகளில் வெற்றியைப் பதிவு செய்தாா்.

போட்டியில் இன்னும் 4 சுற்றுகள் மீதமுள்ள நிலையில், ஆனந்த் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறாா். காா்ல்சென் 9.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

SCROLL FOR NEXT