முகப்பு
செய்திகள்

கடைசி டி20 : மழையால் தாமதமாகும் ஆட்டம்

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

Updated On : 19 ஜூன் 2022, 7:28 pm IST
பகிர்:

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டித் தொடங்க தாமதமாகிறது.

முன்னதாக, டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் ரிஷப் பந்த தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

தென்னாப்பிரிக்காவில் கேப்டன் டெம்பா பவுமா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அணியினை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் வழிநடத்துகிறார். அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டாஸின் போது அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.