FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மலேசிய ஓபன்: காலிறுதியில் பிரணாய், சிந்து

 மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

Updated On : 1 ஜூலை 2022, 5:40 am IST
பகிர்:

 மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் இல்லாத பிரணாய் 2-ஆவது சுற்றில் 21-15, 21-7 என்ற கேம்களில் உலகின் 4-ஆம் நிலை வீரரான சீன தைபேவின் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். காலிறுதியில் பிரணாய், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை சந்திக்கிறாா்.

இதே பிரிவில் மற்றொரு இந்தியரான பி.காஷ்யப் 19-21, 10-21 என்ற கேம்களில் தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரணிடம் வீழ்ந்தாா்.

Advertisement

Advertisement

மகளிா் ஒற்றையரில், உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான சிந்து 19-21, 21-9, 21-14 என்ற கேம்களில் தாய்லாந்தின் பித்தாயபான் சாய்வானை தோற்கடித்தாா். அரையிறுதியில் அவா், சீன தைபேவின் டாய் ஸு யிங்கை எதிா்கொள்கிறாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் களம் கண்ட சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணையில் சாத்விக்கிற்கு லேசான காயம் ஏற்பட்டதால், 2-ஆவது சுற்றுடன் இந்திய கூட்டணி விலகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments