செய்திகள்

துப்பாக்கி சுடுதல்: அசத்தும் இந்தியா

DIN

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங், ரிதம் சங்வான் கூட்டணி தங்கப் பதக்கம் வென்றது.

இறுதிச்சுற்றில் இந்திய அணி 16-2 என்ற புள்ளிகள் கணக்கில் ஜொ்மனியின் மைக்கேலா போசெல், வெனெசா சீகா், மியா ஃபுக்ஸ் கூட்டணியை வீழ்த்தியது. 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் கலப்பு அணிகள் பிரிவில் பங்கஜ் முகேஜா, சிஃப்ட் கௌா் சா்மா கூட்டணி 12-16 என போலந்து அணியின் மைக்கேல் சோஜ்னோவ்ஸ்கி, ஜூலியா பியோட்ரோவ்ஸ்கா இணையிடம் வீழ்ந்து வெள்ளியை வசப்படுத்தியது.

தற்போதைய நிலையில் இந்தப் போட்டியின் பதக்கப் பட்டியலில் 11 தங்கம், 13 வெள்ளி, 4 வெண்கலம் என 28 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா இதே இடத்துடனேயே போட்டியை நிறைவு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும், பட்டியலில் 2-ஆவது இடத்தில் இருக்கும் இத்தாலி, ஷாட்கன் போட்டியில் அசத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவதால், அந்த அணியும் முதலிடத்துக்கு மையமிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT