முகப்பு
செய்திகள்

ரூ. 17.50 கோடி ஐபிஎல் சம்பளம் பற்றி கேம்ரூன் கிரீன்

ஏலத்தில் என் பெயரைக் கொடுத்தேன். அது தானாக நடைபெற்றுள்ளது...

Updated On : 26 டிசம்பர் 2022, 5:34 pm IST
பகிர்:

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 17.50 கோடிக்கு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டார் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் 67 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு கைல் வெரைனும் யான்செனும் ஜோடி சேர்ந்து சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தினார்கள். வெரைன் 52, யான்சென் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். தென்னாப்பிரிக்க அணி 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேம்ரூன் கிரீன் 5 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு கேம்ரூன் கிரீன் பேட்டியளித்ததாவது:

Advertisement

Advertisement

ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வாக நான் ஒன்றும் செய்யவில்லை. ஏலத்தில் என் பெயரைக் கொடுத்தேன். அது தானாக நடைபெற்றுள்ளது. நான் எப்படிப்பட்டவன், என்ன மாதிரி சிந்திக்கிறேன், என் நம்பிக்கை என எதையும் ஐபிஎல் சம்பளம் மாற்றிவிடாது. ஏலம் முடிந்த பிறகு அணி வீரர்களின் உதவியுடன் டெஸ்ட் ஆட்டத்தில் கவனம் செலுத்தினேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments