முகப்பு
செய்திகள்

ஆஸி. அணி வெளியேறுமா?: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை முதலில் பேட்டிங்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 5 நவம்பர் 2022, 1:38 pm IST
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியில் கருணாரத்னே இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இலங்கை அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். 

4 ஆட்டங்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 4-ம் இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 7 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன. நியூசிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் 7 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments