FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கேம்ரூன் க்ரீன் ஐபிஎல்-லில் விளையாடுவதைத் தடுக்க மாட்டேன்: ஆஸி. கேப்டன்

ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதைத் தடுக்க மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Updated On : 18 நவம்பர் 2022, 1:27 pm IST
பகிர்:

ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதைத் தடுக்க மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ளது. 2023 ஐபிஎல் போட்டியில் பங்குபெறப் போவதில்லை என ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் சமீபத்தில் அறிவித்தார். 

இந்நிலையில் ஆஸி. ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது பற்றி கம்மின்ஸ் கூறியதாவது:

Advertisement

Advertisement

ஐபிஎல் ஏலத்தில் கிரீன் பங்குபெறுவார் என நினைக்கிறேன். ஏலம் நடக்க இன்னும் கொஞ்ச நாள்கள் இருக்கின்றன. சுயநலம் கொண்ட கேப்டனாக, கிரீன் தன்னுடைய ஆற்றலையெல்லாம் ஆஸ்திரேலிய அணிக்காகச் செலவிட வேண்டும் என்றே எண்ணுவேன். ஆனால் அதுபோன்ற ஒரு வாய்ப்பு வரும்போது அதை வேண்டாம் எனச் சொல்லிவிடு என அவரிடம் நான் எப்படிக் கூற முடியும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments