முகப்பு
செய்திகள்

விராட் கோலியை சந்தித்து நெகிழ்ந்த மே.இ.தீவுகள் அணி வீரரின் தாயார்! வைரல் விடியோ!

மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட் கீப்பர் ஜோஷுவா டி சில்வாவின் தாயார் விராட் கோலியை சந்தித்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார். 

Updated On : 22 ஜூலை 2023, 11:12 am IST
படம்: ட்விட்டர்
பகிர்:

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 76வது சர்வதேச சதத்தினை அடித்து அசத்தினார். டெஸ்டில் இது 29வது சதம் என்பதும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு டெஸ்டில் சதமடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

போட்டியின்போது விக்கெட் கீப்பர் ஜோஷுவா டி சில்வாவும் விராட் கோலியும் பேசியது இணையத்தில் வைரலானது. விராட் கோலி சதமடிக்க வேண்டுமெனவும் அவரை சந்திக்க தனது தாயார் வந்திருப்பதாகவும் ஜோஷுவா டி சில்வா தெரிவித்தார். 

போட்டி முடிந்தப் பிறகு ஜோஷுவா டி சில்வாவின் தாயார் விராட் கோலியை சந்தித்து நெகிழ்ச்சியடைந்த விடியோ இணையத்தில் வைரலானது. விராட் கோலி சந்தித்து ஆனந்த கண்ணீருடன் அவர் கூறியதாவது: 

‘நான் உன்னைப் (ஜோஷுவா டி சில்வா) பார்க்க வரவில்லை. ஏனெனில் உன்னை நான் தினமும் பார்க்கிறேன். அதனால் விராட் கோலியை பார்க்க மட்டுமே வருகிறேனென’ எனது மகனிடம் கூறினேன். இப்போதுதான் விராட் கோலியை முதன்முறையாக சந்திக்கிறேன். அவர் அழகான அற்புதமான மனிதர். அவரும் எனக்கு மகன் போலதான். விராட் கோலிக்கு அழகான மனைவியும் இருக்கிறார்கள். விராட் கோலி திறமையான கிரிக்கெட்டர். விராட் கோலி போலவே எனது மகனும் சிறப்பாக விளையாடுவாரென நம்புகிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments