செய்திகள்

வரலாற்றை மாற்றுமா சென்னை, மும்பை அணிகள்?

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத், லக்னெள அணிகளை சென்னை, மும்பை அணிகள் வென்று வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

DIN

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத், லக்னெள அணிகளை சென்னை, மும்பை அணிகள் வென்று வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் கடைசி சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் புதிதாக அறிமுகமானது. குஜராத் அணி கலந்து கொண்ட முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இந்நிலையில், 4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை அணியை கடந்த சீசனில் இரண்டு முறையும், நடப்பு சீசனில் ஒரு முறையும் எதிர்கொண்ட குஜராத் அணி 3 முறையும் வெற்றி பெற்றது.

அதேபோல், 5 முறை சாம்பியனான மும்பை அணியை இதுவரை 3 முறை எதிர்கொண்டுள்ள லக்னெள அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த சீசனில் குஜராத், சென்னை, லக்னெள, மும்பை அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சென்னையில் நடைபெறும் பிளே ஆஃப் முதல் சுற்றில் நாளை குஜராத் அணியை சென்னையும், எலிமினேட்டர் சுற்றில் நாளை மறுநாள் லக்னெள அணியை மும்பையும் எதிர்கொள்கின்றன.

இந்த போட்டியில் சென்னை, மும்பை அணிகள் வெற்றி பெற்று ஐபிஎல்லில் புதிய வரலாறு படைக்கும் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

ராகுலுக்கு ஒரு வாரம் கெடு..! வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் உறுதிமொழி பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT