பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் காயம்: உலகக் கோப்பையில் கலந்து கொள்வாரா?
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் இளம் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான நசீம் ஷாவுக்கு இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டது. அவரது வலது தோளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 வீரர்கள்!
கொழும்பு மற்றும் துபையில் நசீம் ஷாவுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன்களில் அவருக்கு வலது தோளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அவரை சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழு நசீம் ஷாவின் காயத்தின் நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. மருத்துவக் குழு நிபுணர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பான சிகிச்சையை அவருக்கு அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு அவர் பாகிஸ்தான் அணிக்கு திரும்புவது குறித்து தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.