செய்திகள்

ரஞ்சிக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை!

DIN

முதன் இன்னிங்ஸ் ரன்கள் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் விளையாடி வந்த நிலையில், போட்டி இன்று முடிவுக்கு வந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. இருப்பினும், முதல் இன்னிங்ஸ் ரன்கள் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் விதர்பா அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் தற்போது ரன்கள் முன்னிலை அடிப்படையில் மும்பை அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மும்பை அணி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் மோதுகின்றன.

காலிறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை மற்றும் பரோடா அணிகள் முறையே 384 ரன்கள் மற்றும் 348 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT