குர்பிரீத் சிங் 
செய்திகள்

இந்திய கால்பந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக குர்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக குர்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வந்த சுனில் சேத்ரி அண்மையில் அவரது ஓய்வு முடிவை அறிவித்தார். 39 வயதாகும் சுனில் சேத்ரி, ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச்சுற்றில் குவைத் அணிக்கு எதிரான போட்டியுடன், தான் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சுனில் சேத்ரி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து அணியில் கேப்டனாக கோல் கீப்பர் குர்பிரீத் சிங், இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தோஹாவில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய அணி கத்தாரை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் அணியைக் கேப்டனாக குர்பிரீத் சிங் வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் ரத்து: கிராமப்புற வாழ்வாதாரத்திற்குப் பேரழிவு - சோனியா

”தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர்! நயினார் நாகேந்திரன் பேட்டி | BJP

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ.5,000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

சென்னை மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதி!

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

SCROLL FOR NEXT