FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நிறப் பாகுபாடு..? தங்கப் பந்து விருது கிடைக்காதது குறித்து வினிசியஸ் ஜூனியர்!

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருது வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்காதது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

29 அக்டோபர் 2024, 1:28 pm IST
வினிசியஸ் ஜூனியர் - Manu Fernandez
பகிர்:

மான்செஸ்டர் சிட்டி அணியின் மிட் ஃபீல்டர் ரோட்ரி இந்தாண்டுக்கான பேலன் தோர் விருதினை (தங்கப் பந்து) வென்றார்.

கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக இந்த விருது கருதப்படுகிறது. இந்தமுறை ரியல் மாட்ரிட் அணியின் ஃபார்வேட் வீரர் வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்குமென பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் கடைசியில் அவருக்கு இல்லையென தகவல் வெளியானது.

அதனால் இந்த விருது விழாவினை ரியல் மாட்ரிட் அணியினர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

ரியல் மாட்ரிட் அணியில் வினிசியஸ் உடன் பலரும் தேர்வுப் பட்டியலில் இருந்தார்கள்.

2023-24 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு உலகின் சிறந்த வீரராக பேலன் தோர் விருதினை பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

நிற வெறியினால் வினிசியஸுக்கு விருது தரவில்லை எனக் கூறப்படுகிறது. வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்காதது கால் பந்து உலகில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், வினிசியஸ் முதல்முறையாக மௌனம் கலைத்தார். தனது எக்ஸ் பக்கத்தில், “தேவைப்பட்டால் நான் இதைவிட 10 மடங்கு அதிகமாக உழைக்கவும் தயார். ஆனால், அவர்கள் இன்னும் தயாராகவில்லை” எனக் கூறியுள்ளார்.

நிறப் பாகுபாட்டினை காரணம் காட்டி பேசியுள்ளதாகவே ரியல் மாட்ரிட் அணி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments