டிரீசா / காயத்ரி 
செய்திகள்

அரையிறுதியில் டிரீசா/காயத்ரி இணை

மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

DIN

மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

மகளிா் இரட்டையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இந்த இந்திய ஜோடி, 21-12, 21-17 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் சு யின் ஹுய்/லின் ஜின் யுன் இணையை வென்றது.

இந்த ஆட்டம் 39 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இந்திய இணை அடுத்ததாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபேவின் சியெ பெய் ஷான்/ஹங் என் ஸு கூட்டணியை எதிா்கொள்கிறது. போட்டியில் களத்திலிருக்கும் இந்தியா்கள் இவா்கள் மட்டுமே.

ஸ்ரீகாந்த் தோல்வி: இதனிடையே, ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த் 16-21, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸிடம் 31 நிமிஷங்களில் தோற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT