பெனால்டியை தவறவிட்ட யுனைடெட் வீரர்: மோசமான சாதனையிலும் பங்கேற்பு!
மான்செஸ்டர் யுனைடெட் வீரர் தவறவிட்ட பெனால்டி குறித்து...
மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் தவறவிட்ட பெனால்டியால் அந்த வெற்றி பெறாமல் போட்டி சமனில் முடிந்தது.
இதற்காக அந்த அணியின் சொந்த ரசிகர்களாலே அவர் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் புகழ்பெற்ற அணியாக இருப்பது மான்செஸ்டர் யுனைடெட் அணி. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் இவர்களைச் சந்தித்து பேசினார்கள்.
Advertisement
Advertisement
சமீப காலமாக மான்செஸ்டர் யுனைடெட் அணி மோசமாக விளையாடி வருகிறது.
இந்த சீசனில் பிரிமீயர் லீக்கின் யுனைடெட் அதன் 2-ஆவது போட்டியில் ஃபுல்கம் அணியுடன் மோதியது.
இதில் 38-ஆவது நிமிஷத்தில் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
ப்ரூனோ ஃபெர்னான்டஸ் அதை இடதுபுறம் வலைக்கு பக்கத்தில் மேலே அடித்து வீணடித்தார். பின்னர், இறுதியில் போட்டி 1-1 என சமனில் முடிந்தது.
இதற்காக பலரும் இவரை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். புள்ளிப் பட்டியலில் யுனைடெட் 16-ஆவது இடத்தில் இருக்கிறது.
பிரீமியர் லீக்கில் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் களமிறங்கியது முதல் இதுவரை அதிகமான பெனால்டியை (5) தவறவிட்ட வீரராக அவர் மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
The match ended in a draw without a win due to a missed penalty by Manchester United player Bruno Fernandes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.