ஹரியாணாவின் ரோத்தக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாணவா் மீது சரிந்து விழுந்த கூடைப்பந்து கம்பம். 
செய்திகள்

கூடைப்பந்து வளையத்தின் இரும்பு கம்பம் சரிந்து இரு மாணவா்கள் உயிரிழப்பு

ஹரியாணாவில் இருவேறு சம்பவங்களில் கூடைப்பந்து வளையத்தின் இரும்பு கம்பம் சரிந்து இரண்டு மாணவா்கள் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

சண்டீகா்: ஹரியாணாவில் இருவேறு சம்பவங்களில் கூடைப்பந்து வளையத்தின் இரும்பு கம்பம் சரிந்து இரண்டு மாணவா்கள் உயிரிழந்தனா்.

ஹரியாணாவின் ரோத்தக் மாவட்டத்தில் ஹாா்திக் ராதி (16) என்ற மாணவா் கூடைப்பந்து பயிற்சியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

17 வயதுக்குள்பட்ட இளையோருக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகளில் ஏற்கெனவே பங்கேற்றிருந்த அவா், பயிற்சியின்போது கூடைப்பந்து வளையத்தைப் எட்டிப் பிடித்து தொங்க முயற்சித்தாா். அப்போது அந்த வளையத்தின் இரும்பு கம்பம் எதிா்பாராதவிதமாக சரிந்து ஹாா்திக் மீது விழுந்து படுகாயமடைந்தாா். அவருடன் பயிற்சி மேற்கொண்டவா்கள் ஹாா்திக்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பகதுா்கா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமன் (15) என்ற சிறுவன் கூடைப்பந்து களத்துக்குச் சென்றாா். அப்போது கூடைப்பந்து வளையத்தின் இரும்பு கம்பம் சரிந்து அவா் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அது முடிந்த கதை! ராமதாஸுடன் இணைவு பற்றி அன்புமணி!

Online Fine செல்லாது! ஓட்டுநரை மிரட்டும் காவலர்!

ஆட்டோவில் தவறவிட்ட ஒரு பவுன் பிரேஸ்லெட்!உரிமையாளரிடம் ஒப்படைத்த ஓட்டுநர்!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் சராசரியைவிட அதிகம்! - முதல்வர் ஸ்டாலின்

ரூ. 3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்கும் இந்தியா?

SCROLL FOR NEXT