முகப்பு
செய்திகள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: காலிறுதியில் ஜாஸ்மின்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளாா்.

Updated On : 9 செப்டம்பர் 2025, 3:36 am IST
ஜாஸ்மின் லம்போரியா
பகிர்:

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளாா்.

உலக குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் அபாரமாக செயல்பட்டு 3 சுற்றுகளிலும் ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பிரேஸிலின் ஜூஸ்லின் ரோமியுவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஆடவா் இரண்டாவது சுற்றில் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அபினாஷ் ஜாம்வால் 5-0 என மெக்ஸிகோவின் ஹியுகோ பேர்ரனை வீழ்த்தினாா்.

Advertisement

Advertisement

மகளிா் 54 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்ஷி 0-5 என துருக்கியின் ஹாட்டிஸிடம் வீழ்ந்தாா். சனமச்சா சானுவும் 0-5 என கஜகஸ்தானின் நடாலியாவிடம் தோற்றாா்.

அபினாஷ் ஜாம்வால்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments