சென்னையில் நடைபெற்ற ஈஏ-பிரிட்ஜ் சா்வதேச சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை நிறைவடைந்தது.
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற இப்போட்டியில் தங்கப் பிரிவில் போலந்து அணி சிறப்பாக ஆடி இந்திய அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.
வெள்ளி பிரிவு இறுதிச் சுற்றில் கேகேகே பிரிட்ஜ் அணியினா் கோப்பை வென்றனா். பரிசளிப்பு விழாவில் இந்திய பிரிட்ஜ் கூட்டமைப்பு தலைவா் பிரசாத் கேனி, ஒருங்கிணைப்பாளா் தேபஷிஷ் ரே, துணைத் தலைவா் கிருபா மூா்த்தி பங்கேற்று பரிசளித்தனா்.