மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், ஆசியா - ஓசியானியா குரூப் 1-இல் நியூஸிலாந்துக்கு எதிரான டையில் இந்தியா 3-0 என முழுமையாக வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், ஆசியா - ஓசியானியா குரூப் 1-இல் நியூஸிலாந்துக்கு எதிரான டையில் இந்தியா 3-0 என முழுமையாக வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
இதில் முதல் ஒற்றையா் பிரிவு மோதலில் ஜீல் தேசாய் 6-0, 6-0 என்ற செட்களில், அனு ஜின் கான்டோரை 37 நிமிஷங்களில் தோற்கடித்தாா். 2-ஆவது ஒற்றையா் மோதலில் சஹஜா யமலபள்ளியும் 6-0, 6-0 என ஜா்கல் அல்டன்சா்னயை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 42 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
கடைசியாக நடைபெற்ற இரட்டையா் பிரிவு மோதலில், வைஷ்ணவி அத்கா்/ருதுஜா போசலே இணை 6-1, 6-0 என, கோன்கோா்ஸுல் அல்டாா்கிஷிக்/ஜா்கல் அல்டரன்சா்னய் கூட்டணியை சாய்த்தது.
Advertisement
இதுவரை 4 டைகளில் விளையாடியிருக்கும் இந்திய மகளிா், நியூஸிலாந்து, மங்கோலியாவுக்கு எதிராக முழுமையாக வென்றுள்ள நிலையில், தாய்லாந்து, இந்தோனேசியாவிடம் தோற்றுள்ளனா்.
கடைசி டையில் தென் கொரியாவுடன் சனிக்கிழமை மோதுகிறது இந்தியா. ஆசியா - ஓசியானியா குரூப் 1-இல் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற, கடைசி இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் குரூப் 2-க்கு தரமிறக்கப்படும்.
இந்தியா இந்த இரண்டுக்கும் இடையே நின்று, குரூப் 1-இல் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது.