செய்திகள்

ரஞ்சி கோப்பை: தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை

பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.

சேலத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பரோடா அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்களைக் குவித்தது. தமிழகம் முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 126 ஓவா்களில் 411/7 ரன்களைக் குவித்தது. தொடக்க பேட்டா் விமல் குமாா் அதிரடியாக ஆடி 182 ரன்களை விளாசினாா். அவரது அதிரடியில் 2 சிக்ஸா், 13 பவுண்டரிகள் அடங்கும்.

இந்திய ஏ அணி முன்னாள் வீரா் பிரதோஷ் ரஞ்சன் பால் 80 ரன்களை சோ்த்தாா்.

இதன் மூலம் பரோடா அணியை காட்டிலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றது தமிழகம். இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற தவறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி மாதப் பலன்கள் - மீனம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கும்பம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - மகரம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - தனுசு

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

SCROLL FOR NEXT