அரையிறுதியில் தோல்வியுற்ற பிவி சிந்து..! கோப்பைக்கான காத்திருப்பு 2 ஆண்டுகளாக நீடிப்பு!
ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் தோல்வியுற்ற பிவி சிந்து குறித்து...
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து போராடித் தோல்வியுற்றுள்ளார்.
முன்னதாக, காலிறுதியில் சீன தைபேயின் சென் சூ யுவுடன் பிவி சிந்து 21-6, 21-9 என நேர் கேம்களில் வென்றிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் அரையிறுதிக்குச் சென்றார்.
அகானே யமகுச்சியுடன் பிவி சிந்து இதுவரை 28 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 - 13 என்ற சிறப்பான வெற்றியை பிவி சிந்து தன்வசம் வைத்திருக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 29ஆவது முறையாக மோதிய இந்தப் போட்டியில் அகானே யமகுச்சி 22-20, 21-12 என நேர் கேம்களில் வென்றார். பிவி சிந்து - அகானே யமகுச்சி உடன் நேருக்கு நேர் மோதியதில் 15-14 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சையது மோடி கோப்பைக்குப் பிறகு (2024) பிவி சிந்து தனது கோப்பைக் கனவு தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்தாண்டு மலேசிய ஓபனிலும் பிவி சிந்து அரையிறுதியில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.