முகப்பு
கிரிக்கெட்

இந்தியாவில் கிரிக்கெட் அகாடெமி தொடங்கும் முன்னாள் ஆஸி. கேப்டன்?

இந்தியாவில் கிரிக்கெட் அகாடெமி தொடங்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆர்வமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 6:40 pm IST
மைக்கேல் கிளார்க் (கோப்புப் படம்)
பகிர்:

இந்தியாவில் கிரிக்கெட் அகாடெமி தொடங்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆர்வமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஹரியாணா மாநில முதல்வர் நயாப் சிங் சைனியை அவரது அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் சந்தித்து இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான விளையாட்டுத் துறை வளர்ச்சி குறித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது மைக்கேல் கிளார்க் பேசியதாவது: ஹரியாணா பல திறமையான வீரர், வீராங்கனைகளை உருவாக்கியுள்ளது. இங்கு திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு பஞ்சம் கிடையாது. ஹரியாணா மாநிலத்தால் இனி வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான தரமான வீரர், வீராங்கனைகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன்.

Advertisement

Advertisement

ஆஸ்திரேலியாவில் உள்ள இளம் வீரர்களை இந்தியாவுக்கு நான் அழைத்து வந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவும் இளம் வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி அவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது போன்று இரண்டு நாடுகளுக்கு இடையே வீரர்களை பரிமாற்றிக் கொள்வது சர்வதேச அளவில் அவர்களுக்கு சிறப்பான அனுபவம் கிடைக்க உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் ஹரியாணாவில் கிரிக்கெட் அகாடெமி அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறேன் என்றார்.

கடந்த 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு இடைவெளியில் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Reports indicate that former Australian captain Michael Clarke is keen on starting a cricket academy in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.