ராஜஸ்தான் ராயல்ஸை கையகப்படுத்திய மிட்டல் குடும்பம், அதார் பூனாவாலா: மதிப்பு ரூ. 15,600 கோடி!
புது தில்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெருவாரியான பங்குகளை, இந்திய தொழிலதிபர்களான லக்ஷ்மி என். மிட்டல், அவர் மகன் ஆதித்யா மிட்டல், அதார் பூனாவாலா ஆகியோர் இணைந்து ரூ.15,600 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக அந்த அணியை, அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கால் சோமானி, வால்மார்ட் குழுமைத்தைச் சேர்ந்த ராப் வால்டன், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளரான ஹம்ப் குடும்பத்தினர் இணைந்த கூட்டமைப்பு ரூ.15,290
கோடிக்கு வாங்குவதாக இருந்தது.
Advertisement
பல்வேறு காரணங்களால் அது நிகழாமல் போனதையடுத்து, தற்போது லக்ஷ்மி என்.மிட்டல், அவர் மகன் ஆதித்யா மிட்டல், அதார் பூனாவாலா ஆகியோர் கூட்டாக, ராஜஸ்தான் அணியின் 75 சதவீத பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்த ஒப்பந்த மதிப்பானது, ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் அணியான பார்படோஸ் ராயல்ஸ், எஸ்ஏ20 அணியான பார்ல் ராயல்ஸ் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாக கவுன்சில் உள்ளிட்டவை ஒப்புதல் வழங்கவேண்டியுள்ளதால், நடப்பாண்டின் 3}ஆவது காலாண்டில் இந்த உரிமையாளர் மாற்றம் நிறைவடையும் எனத் தெரிகிறது.
ராஜஸ்தான் அணியின் 75 சதவீத பங்குகள் மிட்டல் குடும்பத்திடமும், 18 சதவீத பங்குகள் பூனாவாலாவிடமும் இருக்கும் நிலையில், எஞ்சிய 7 சதவீத பங்குகள், மனோஜ் பதாலே உள்ளிட்ட முந்தைய முதலீட்டாளர்கள் வசம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.