குவாலிஃபையர் 2: டாஸ் சுண்டியதில் சர்ச்சை; ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்!
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் இன்று (மே 29) நடைபெறும் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
Advertisement
Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் சாய் கிஷோர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சர்ச்சையான டாஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், டாஸை சுண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ஹெட்ஸ் எனக் கேட்டார். ஆனால், டாஸில் ஹெட்ஸ் விழவில்லை. இந்த நிலையில், அவர் கேட்டது சரியாகக் கேட்கவில்லை என போட்டியின் நடுவர் மீண்டும் டாஸ் வீசக் கூறினார்.
இரண்டாவது முறை டாஸ் வீசப்பட்டபோது, ரியான் பராக் மீண்டும் ஹெட்ஸ் எனக் கேட்க, இம்முறை ஹெட்ஸ் விழுந்தது. அவரும் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது.
டாஸ் வீசப்பட்ட பிறகு பேசிய ஷுப்மன் கில் துரதிருஷ்டவசமாக போட்டியின் நடுவருக்கு ரியான் பராக் ஹெட்ஸ் எனக் கேட்டது கேட்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், அவர் மிகவும் அதிருப்தியுடன் தலைமைப் பயிற்சியாளர் நெஹ்ராவுடன் பேசியதைப் பார்க்க முடிந்தது.
டாஸை வென்றிருந்தால் ஷுப்மன் கில்லும் பேட்டிங் செய்வதையே தேர்தெடுக்க நினைத்திருந்ததாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
In the Qualifier 2 match of the IPL series against the Gujarat Titans, the Rajasthan Royals won the toss and elected to bat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.