சஹீரா, புர்னா பாய் கூட்டணியில் கால்பந்து உலகக் கோப்பைக்கான பாடல்!
கால்பந்து உலகக் கோப்பைக்காக வெளியான பாடல் குறித்து...
கால்பந்து உலகக் கோப்பைக்கான அதிகாரபூர்வமான பாடல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது.
பிரபல கொலம்பிய பாடகியும் நடன கலைஞருமான சஹீரா, நைஜீரிய பாடகர் புர்னா பாய் உடன் இணைந்து, “டாய் டாய்” என்ற இந்தப் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.
முன்னதாக, சஹீரா 2010ல் நடனமாடிய வாக்கா வாக்கா பாடல் உலகம் முழுவதும் புகழ்ப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Advertisement
தற்போது வெளியாகியுள்ள பாடல் குறித்து ஃபிஃபா, “டாய் டாய் பாடல் சஹீரா, புர்னா பாய் உடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள சப்தங்களையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து கால்பந்து, கலாசாரம், ஒற்றுமையை வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பாடலுக்கு ராயல்டி மூலம் கிடைக்கும் தொகை ஃபிஃபா குளோபல் சிட்டிசன் எஜுகேசன் ஃபண்டுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் குழந்தைகளின் கல்விக்கு செலவிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஜூலை 19ஆம் தேதி நியூ ஜெர்ஸியில் நடைபெறும் போட்டியின் பாதி நேரத்தில் மடோனா, சஹீரா, பிடிஎஸ் குழுவினர் இசைக்கச்சேரி நடப்பதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.