லைஃப் ஆப் பை திரைப்படத்துக்கு புகைப்படம் எடுத்த கலைஞர்
ஆஸ்கர் விருது பெற்ற "லைஃப் ஆப் பை' திரைப்படக்குழுவில் புகைப்படம் எடுக்கும் பணியை
ஆஸ்கர் விருது பெற்ற "லைஃப் ஆப் பை' திரைப்படக்குழுவில் புகைப்படம் எடுக்கும் பணியை மேற்கொண்ட ஐ.செந்தில்குமார், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
÷ஹாலிவுட் திரைப்படமான "லைஃப் ஆப் பை' திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.
Advertisement
÷ஆஸ்கர் விருதை பெற்றுள்ள படத்தின் இயங்குநர் ஆங்லிக்கும், இத் திரைப்படத்தில் பணியாற்றிய கலை இயக்குநர் டேவிட் கிராப்மேன், இந்தியக்குழு கலை இயக்குநர் ஜேம்ஸ் ட்ரூஸ்டெல் மற்றும் இத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
÷இத்திரைப்படம் பெத்தி செமினார் பள்ளி, கலவை கல்லூரி பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது.
÷இப்படக்குழுவினருடன் நானும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இத்திரைப்படத்தில் கலை இயக்குநர்கள் புதுச்சேரியில் செட் அமைப்பதற்காக புகைப்படம் எடுக்கும் பணியை நான் செய்துள்ளேன்.
÷புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்படக்குழுவினருடன் இணைந்து பல்வேறு பணிகளை செய்துள்ளனர் என்றார் அவர்.